twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிக்கவா செய்றீங்க, காட்டுறேன் நான் யார்னு காட்டுறேன்: சர்ச்சை இயக்குனர் சவால்

    By Siva
    |

    ஹைதராபாத்: தான் யார் என்பதை காட்டப் போவதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

    28 ஆண்டுகள் கழித்து நாகர்ஜுனாவும், சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் சேர்ந்துள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நேற்று நடந்தது.

    நாகர்ஜுனா பன்ச் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்டது.

    விமர்சனம்

    விமர்சனம்

    என் கற்பனை திறன் போய்விட்டது என்று மக்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். என் கற்பனை திறன் அப்படியே உள்ளது என்பதை இந்த படம் மூலம் நிரூபித்துக் காட்டுவேன் என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

    நாகர்ஜுனா

    நாகர்ஜுனா

    எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் நாகர்ஜுனாவின் திறமை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்த படம் நன்றாக வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராம் கோபால் வர்மா.

    ஹிட்

    ஹிட்

    ராம் கோபால் வர்மாவின் படத்தில் நாகர்ஜுனா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் தனது வாழ்க்கையை மாற்றும் ஹிட்டாக அமையும் என்று நாகர்ஜுனா நம்புகிறார்.

    28 ஆண்டுகள்

    28 ஆண்டுகள்

    சிவா என்ற ஹிட் படத்தில் நாகர்ஜுனாவும், ராம் கோபால் வர்மாவும் சேர்ந்து பணியாற்றினர். அதையடுத்து 28 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிண்டல்

    கிண்டல்

    கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் நாகர்ஜுனா மீது உள்ளது என்று ராம் கோபால் வர்மா தெரிவித்திருப்பது உலக மகா ஐஸுடா சாமி என்கிறார்கள் தெலுங்கு திரையுலகினர்.

    English summary
    Ram Gopal Varma said that he will prove the people that his creativity is not lost through his upcoming movie with Nagarjuna.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X