Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிரிக்கவா செய்றீங்க, காட்டுறேன் நான் யார்னு காட்டுறேன்: சர்ச்சை இயக்குனர் சவால்
ஹைதராபாத்: தான் யார் என்பதை காட்டப் போவதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
28 ஆண்டுகள் கழித்து நாகர்ஜுனாவும், சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் சேர்ந்துள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நேற்று நடந்தது.
நாகர்ஜுனா பன்ச் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்டது.
விமர்சனம்
என் கற்பனை திறன் போய்விட்டது என்று மக்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். என் கற்பனை திறன் அப்படியே உள்ளது என்பதை இந்த படம் மூலம் நிரூபித்துக் காட்டுவேன் என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
நாகர்ஜுனா
எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் நாகர்ஜுனாவின் திறமை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்த படம் நன்றாக வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராம் கோபால் வர்மா.
ஹிட்
ராம் கோபால் வர்மாவின் படத்தில் நாகர்ஜுனா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் தனது வாழ்க்கையை மாற்றும் ஹிட்டாக அமையும் என்று நாகர்ஜுனா நம்புகிறார்.
28 ஆண்டுகள்
சிவா என்ற ஹிட் படத்தில் நாகர்ஜுனாவும், ராம் கோபால் வர்மாவும் சேர்ந்து பணியாற்றினர். அதையடுத்து 28 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டல்
கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் நாகர்ஜுனா மீது உள்ளது என்று ராம் கோபால் வர்மா தெரிவித்திருப்பது உலக மகா ஐஸுடா சாமி என்கிறார்கள் தெலுங்கு திரையுலகினர்.