Don't Miss!
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் - சங்கர் மகாதேவன்
சென்னை: என் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன் என்று பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கூறியிருக்கிறார்.
4 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் சங்கர் மகாதேவன் தற்போது ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் 36,௦௦௦ வகுப்புகளுக்கும் அதிகமாக இதுவரை சொல்லித் தந்திருக்கும் இவருக்கு உலகம் முழுவதும் சுமார் 5௦௦௦ க்கும் அதிகமான மாணவர்கள் இருக்கின்றனர்.
47 நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து வரும் சங்கர் மகாதேவன் சமீபத்திய பேட்டியொன்றில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"நான் எனது கடைசி மூச்சுவரை உள்ளவரை பாடிக் கொண்டே இருப்பேன். இந்த வயதான பாடகனின் பாடலை யார் கேட்பது என்று மக்கள் கூறினாலும் நான் பாடுவதை விடமாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
48 வயதாகும் சங்கர் மகாதேவன் கட்யார் கல்ஜாட் க்ஹுசாலி என்ற மராத்திப் படமொன்றில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபோத் பாவே என்பவர் இயக்குகிறார்.
பாடகர், இசையமைப்பாளரைத் தொடர்ந்து நடிகராக சங்கர் மகாதேவன் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.