Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்
சென்னை: விளம்பர படத்தில் நடிப்பதை கேவலமாக கருதுவதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் கழித்து ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத ராஜ்கிரணை பார்ப்பீர்கள்.
பிரபலங்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது புதிது அன்று. இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது,
விளம்பரம்
படத்தில் நடிக்கும்போது மக்களுக்கு நல்ல கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் விளம்பரப் படங்களில் நடிப்பதில் அப்படி எதுவும் இல்லை.
பணம்
விளம்பரப் படங்களில் நடிப்பது காசுக்காக மட்டுமே. விளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமான விஷயமாக கருதுகிறேன். அது எப்படி ஒரு பொருளை பற்றி தெரியாமல் அதை விளம்பரப்படுத்துவதோ.
ஏமாற்று வேலை
ஒரு பொருளை பற்றி எதுவுமே தெரியாமல் காசுக்காக அதை விளம்பரப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம். நான் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன்.
ராஜ்கிரண்
நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் ராஜ்கிரணே கூறிவிட்டார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாங்குவார்கள். அது தவறான பொருளாக இருந்தால் அது நான் மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் என்றார் ராஜ்கிரண்.