Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது, ஏன்னா... விஷால்
சென்னை: அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஜீவன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரை வைத்து சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் ஜெயிக்கிற குதிர. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நடிகர்கள் விஷால், ஆர்யா, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய விஷால் கூறுகையில்,
ஆர்யா
இந்த விழாவுக்கு கிளம்பியபோது ஆர்யா என்னிடம் உன் பட இசை வெளியீட்டு விழாவுக்கே போக மாட்ட, அப்புறம் எப்படி மச்சான் இதுக்கு மட்டும் போகிற என்று கேட்டான்.
திரையுலகம்
இன்னும் 2 ஆண்டுகளுக்கு திரையுலகம் இப்படி தான் செயல்படும். நமக்கு தொடர்பில்லாத படங்களையும் விளம்பரப்படுத்துவதே எங்களின் நோக்கம் என்று ஆர்யாவிடம் நான் கூறினேன்.
நண்பர்கள்
சக்தி சிதம்பரம் தொடர்ச்சியாக படம் எடுக்க வேண்டும். நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்போம். எஸ்.ஏ.சந்திரசேகர், தேனப்பன், டி.சிவா என அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள்.
கோபம்
அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் என்னை எவ்வளவு திட்டினாலும் கோபமே வராது. விஷாலை கைது செய், கைது செய் என்று டிவியில் வந்த செய்தியை சூப்பர் காமெடி என ஏதோ காமெடி சேனலை பார்ப்பதை போன்று என் பெற்றோர் பார்த்தனர்.
நடிகர் சங்கம்
நடிகர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். எங்களை வளர்த்துவிட்ட திரையுலகம் நல்ல வழியில் செல்லவே இளைஞர்கள் வந்திருக்கிறோம் என்றார் விஷால்.