Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரமுத்துட்ட ஒன்னும் நடக்கலனதும் நானா, சின்மயியை சும்மா விட மாட்டேன்: ராதாரவி
Recommended Video
சென்னை: சின்மயியை சும்மா விடப் போவது இல்லை என்று டப்பிங் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக அவர் தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டமே கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சின்மயி.
|
ராதாரவி
ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை. நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் உள்ளதே தவிர ராதாரவியின் பெயர் இல்லை என்று ட்வீட்டினார் சின்மயி.
|
கடிதம்
ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கவில்லை என்று மலேகா அரசு அனுப்பி வைத்த கடிதத்தை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு தான் பொய் சொல்லவில்லை என்றார்.
சின்மயி
சின்மயி வைரமுத்துவை பிளாக்மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றதும் என் பக்கம் திரும்பிவிட்டார். மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்குவது யார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. நான் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
வெளியூர்
நான் புதுக்கோட்டையில் உள்ளேன். சென்னைக்கு திரும்பி வந்ததும் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். சின்மயி வெளியிட்டுள்ள கடிதம் போலி என்று சந்தேகப்படுகிறேன். சின்மயியை சும்மாவிட மாட்டேன். எனக்கு டத்தோ பட்டம் அளித்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார் ராதாரவி.