காயத்ரியை விடுங்க அட்லீயை எப்படி கலாய்ச்சிருக்காங்கன்னு பாருங்க #IAMK
Recommended Video

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இயக்குனர் அட்லீயை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
கவுதம் கார்த்திக் நடித்துள்ள அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை பற்றி பலரும் தரக்குறைவாக விமர்சித்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை.

காயத்ரி
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் ஆபாசம் அதிகம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், காயத்ரியையும் மட்டும் கலாய்க்கவில்லை மற்றொரு பிரபலத்தையும் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
அட்லீ
இந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்று பொய் சொல்லி அந்த பெண்களுடன் சேர்ந்து ஒரே அறையில் தூங்கலாமா என்று கவுதம் கார்த்திக் பாலாவிடம் கேட்பார். அதற்கு அவரோ நீங்க சொல்வது எப்படி இருக்கு தெரியுமா வீரா சார், ஊருக்குள்ள எவனோ ஒருத்தன் மௌனராகம், சத்ரியன் படத்திற்கு ராஜா ராணி, தெறின்னு பேரு வச்சானாம் என்பார். இந்த வசனம் மூலம் அவர்கள் கலாய்த்திருப்பது இயக்குனர் அட்லீயை.

இயக்கம்
இயக்குனர் அட்லீ பல படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு படமாக எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் கவுதம் கார்த்திக் படத்தில் அவரை கலாய்த்துள்ளனர்.

ஓடக் கூடாது
இந்த படம் ஓடக் கூடாது என்று திரைத்துறையில் உள்ளவர்கள் நினைக்கின்றனர். ஆனால் ஹரஹர மகாதேவகி அடல்ட் காமெடியை போன்றே இந்த படமும் சூப்பர் ஹிட்டாவதை யாராலும் தடுக்க முடியாது என்பது இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வத்தை பார்த்தாலே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











