Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விபச்சாரக் கும்பலாக மாறிய இலங்கை டிவி நடிகைகள்- 20 பேருக்கு வலைவீச்சு
சிங்கள டிவி நடிகைகள் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 20 நடிகைளைத் தேடி வருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களில் நான்கு நடிகைகள் பிடிப்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில்தான் இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.
டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இதுபோல விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இலங்கை அரசையும், காவல்துறையையும் அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 20 முக்கிய நடிகைகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதை விட கேவலமான பல செயல்களும் இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள கிளப்களில் பல வெளிநாட்டு பெண்களைக் கொண்டு விபச்சாரத்தை ஓஹோவென நடத்தி வருகிறார்களாம்.
பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமே இல்லாமல் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரத்தில்தான் இது தலைவிரித்தாடி வருவதாகவும் அது கூறுகிறது.
இத்தனை காலமாக வருமானமே இல்லாமல் செத்துப் போய்க் கிடந்த இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் சேர்ப்பதற்காக அரசே மறைமுகமாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.