Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகன் ஆவேன்னு நினைக்கலை..நெட்பிளிக்ஸின் கிரைம் தொடர்.. நடிகரானார் ஐஏஎஸ் அதிகாரி!
டெல்லி: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், வெப் தொடரில் நடிகராக அறிமுகமாகிறார்.
நெட்பிளிக்ஸில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான வெப்சீரிஸ், 'டெல்லி கிரைம்'. இதில், ஷெபாலி ஷா, ரசிகா துக்கல், அடில் ஹூசைன், டென்ஸில்ஸ் ஸ்மித் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த தொடருக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது.
கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்!
நடிப்புக்கு வரவேற்பு
இதில் நிஜ ஐஏஎஸ் அதிகாரி, அபிஷேக் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இப்போது டெல்லியில் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 'ஜார் பந்த்ரா' என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த தொடரில் முழு நீள கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியும் என்கிறார் இந்த அதிகாரி.
சமூக மாற்றம்
இதுபற்றி அவர் கூறும்போது, நான் நடிக்க வருவேன் என்று எந்த கட்டத்திலும் நினைத்ததில்லை. நிர்வாகம் இன்று பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வலுவான அமைப்பை உருவாக்க, தொடர்ந்து உழைத்து வருகிறோம். அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பது நிர்வாகத்தின் மூலமாக மட்டுமில்லாமல், சமூக மாற்றத்தின் மூலம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
தொடர் மூலம்
மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது, சினிமா. அதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லலாம் என்றும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நினைக்கிறேன். பல்வேறு பிரச்னைகளில் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை சினிமா செய்திருக்கிறது. இந்த தொடர் மூலம், இந்த நேரத்தில் நானும் அதை செய்கிறேன்' என்கிறார்.
Recommended Video
அனுபவம் இல்லை
இந்த தொடரின் காஸ்டிங் டைரக்டரான முகேஷ் சாப்ரா கூறும்போது, அபிஷேக்கை எனக்குத் தெரியும் என்பதால், அந்த கேரக்டருக்கு அவரால் மட்டுமே நியாயம் சேர்க்க முடியும் என்று நம்பினேன். அவரிடம் சொன்னேன். அவருக்கு நடிப்பு அனுபவம் இல்லை என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஸ்கிரீனில் அவர் வேறு ஒருவராக இருக்கிறார் என்றார்.