Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இணையத்தில் வெளியான இது நம்ம ஆளு..கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார்
சென்னை: இது நம்ம ஆளு திரைப்படம் இணையதளங்களில் வெளியானதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
சிம்பு-நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
லேட்டாக வந்தாலும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இது நம்ம ஆளு இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் ''எங்கள் நிறுவனம் பலகோடி ரூபாய் செலவு செய்து இது நம்ம ஆளு படத்தை தயாரித்தது.
பல பேர் இரவும் பகலுமாக உழைத்து இது நம்ம ஆளுவை உருவாக்கினர். எனது மகன் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 27ம் தேதி இப்படம் வெளியானது.
ஆனால் படம் வெளியான அடுத்த நாளே இணையத்தில் இப்படம் வெளியாகி விட்டது. தயவு செய்து இதனைத் தடுத்து நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இணையத்தில் வெளியான இது நம்ம ஆளு.. கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் புகார் #IdhuNammaAalu pic.twitter.com/FVoCvnSwKR
— Oneindia Tamil (@thatsTamil) May 30, 2016
இதனைத் தடுத்து நிறுத்தாவிடில் எனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்'' என்று கூறியிருக்கிறார்.
இப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட டி.ராஜேந்தர் படம் வெளியான இணையதளங்களின் பட்டியலையும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார்.