Don't Miss!
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தில்லுக்கு துட்டு இயக்குனரின் "இடியட்" ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை : பயமுறுத்தும் பேய் படங்களை இயக்கி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் காமெடி பேய்களை திரையில் காட்டி ரசிக்க வைத்தவர் இயக்குனர் ராம் பாலா.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை இயக்கியிருந்த இவர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 இயக்கி திரைத்துறையிலும் இயக்குனராக ஜொலித்து வருகிறார்.
இவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது இவரின் மூன்றாவது திரைப்படமான இடியட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாம்பும் கழுத்துமா.. பேட்டும் கையுமா.. எல்லாருமே பார்க்க நினைத்த சிம்பு கம்பேக்.. ஈஸ்வரன் வரான்!
காமெடியை மையமாக
சினிமா ரசிகர்களிடையே என்றைக்கும் மாறாத ஒரே ரசனை காமெடி திரைப்படங்களை இரசிப்பது. அவ்வாறு காமெடியை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் இன்று வரை தோல்வியை சந்தித்ததாக சரித்திரம் இல்லை.
பிரபலமானவர்கள்
சினிமாவில் பல இயக்குனர்கள் தங்களது தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் நிலையில், இயக்குனர் சுந்தர் சி, கமல்ஹாசன், எழில்,கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குனர்கள் காமெடிப் படங்களை இயக்குவதில் பிரபலமானவர்கள்.
விஜய் டிவியில்
இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் விஜய் டிவியின் பிரபல இயக்குனரான ராம் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற மாபெரும் வெற்றித் தொடரை இயக்கியதன் மூலம் பிரபலமான ராம் பாலா இப்பொழுது திரைப் படங்களையும் இயக்கி வருகிறார்.
யோகி பாபு
இப்பொழுது ஹீரோவாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, ஜீவா உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கிய லொள்ளு சபா நிகழ்ச்சிக்கென இன்று வரை தனி ரசிகர் கூட்டம் இருந்துவருகிறது.
தில்லுக்கு துட்டு
லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இயக்குனர் ராம்பாலா சந்தானத்தின் அட்டகாசமான நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
கண்டமேனிக்கு கலாய்த்து
பயமுறுத்தும் பேய் படங்களை இயக்கி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் பேய்களை வைத்து காமெடியும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் ராம் பாலா. இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே பலரும் ரசிக்கும் வகையில் பேய்களை கண்டமேனிக்கு கலாய்த்து காமெடி செய்து அசத்தி இருந்த ராம் பாலாவின் தில்லுக்கு துட்டு திரைப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்து திரையரங்குகளில் ஆரவாரமாக கொண்டாடப்பட்டு வயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைத்தது.
அதே பார்முலா
தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்த ராம் பாலா தொடர்ந்து தில்லுக்கு துட்டு பாகம் இரண்டுக்கு அதே பார்முலாவை பயன்படுத்தி மற்றுமொரு வெற்றியை தட்டி கல்லாவை கட்டினார்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை
இவ்வாறு சந்தானத்தின் நடிப்பில் உருவான மெகா ஹிட் திரைப்படங்களான தில்லுக்கு துட்டு பாகம் 1 மட்டும் 2 தொடர்ந்து ராம் பாலா தனது மூன்றாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்பொழுது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
மிர்ச்சி சிவா
முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் கலப்பான காமெடி களத்துடன் உருவாகி இருக்கும் பாலாவின் மூன்றாவது திரைப்படமான "இடியட்" திரைப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மிர்ச்சி சிவாவும் நிக்கி கல்ராணியும் இணைந்து பேயை அலேக்காகத் தூக்கிக் கொண்டு ஹாயாக செல்வது போல வெளியாகி இருக்கும் "இடியட் " திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரையும் கவர்ந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.