Don't Miss!
- News ஷாக்கிங்! அமெரிக்கா சொன்னதையே கேட்காத இஸ்ரேல்.. உலக நாடுகளை 3ம் உலகப்போருக்கு இழுக்கும் நெதன்யாகு?
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘இட்லி’யில் தோன்றும் மறைந்த நடிகை ‘குண்டு’ கல்பனா.. கிராபிக்ஸ் புண்ணியத்தால்!
சென்னை: நடிகை கல்பனாவின் மறைவால் பாதியில் நிறுத்தப்பட்ட இட்லி படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் உதவியுடன் கல்பனா சம்பந்தப்பட்ட மீதிக் காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழில் பாக்யராஜ் ஜோடியாக கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் சின்ன வீடு படத்தில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா. அவரது பூசிய உடல்வாகால் அவரது பெயருக்கு முன்னே 'குண்டு' என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திடீர் மரணம்...
கடந்த ஜனவரி மாதம் தெலுங்குப் பட ஹூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருந்த கல்பனா, ஹோட்டல் அறையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால், அவர் நடித்துக் கொண்டிருந்த இட்லி என்ற படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பாட்டிகள் கதை...
இப்படத்தில் கல்பனாவுடன் சரண்யா, கோவை சரளா உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வந்தனர். மூன்று பாட்டிகளைப் பற்றிய கதையான இப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்பனா நடித்து வந்தார்.
படக்குழு அதிர்ச்சி...
பாதிப்படம் படமாக்கப்பட்ட நிலையில் கல்பனாவின் மரணத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திய படக்குழு, கல்பனா சாயலில் உள்ள யாரையாவது தேர்ந்தெடுத்து மீதிப் படத்தை முடிக்கலாமா என ஆலோசித்து வந்தனர்.
கிராபிக்ஸ் உதவியுடன்...
ஆனால், அத்திட்டம் கைகூடாததால் கிராபிக்ஸ் உதவியுடன் கல்பனா சம்பந்தப்பட்ட மீதிக்காட்சிகளைப் படமாக்குவது என தற்போது முடிவு செய்துள்ளனராம். இதனால் மீண்டும் நேற்று இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.