Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா மட்டும் வரலைன்னா.. இந்நேரம் மாஸ்டர் ரிலீஸ் ஆகியிருக்கும்.. ரத்னகுமார் நெகிழ்ச்சிப் பதிவு!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால், இந்நேரம் திட்டமிட்டபடி மாஸ்டர் ரிலீஸ் ஆகியிருக்கும் என ரத்னகுமார் நெகிழ்ச்சி ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியான இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சியாக படக்குழு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு ரத்னகுமார் இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ஏகப்பட்ட தடை
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டு காரணமாக மாஸ்டர் படப்பிடிப்புக்கு முதன் முதலாக சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம், வருமான வரி சோதனை உள்ளிட்ட சிக்கல்களை மாஸ்டர் படக்குழுவும் நடிகர் விஜய்யும் சந்திக்க நேரிட்டது. பல தடைகளை கடந்து படம் ரிலீசாகும் என எதிர்பார்த்த நேரத்தில் இப்படியொரு பேரிடர் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப் போட வைத்து விட்டது.
|
கொரோனா மட்டும் வரலைன்னா
ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்நேரம் கொரோனா மட்டும் வரலைன்னா மாஸ்டர் படம் ரிலீசாகியிருக்கும். தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள். மாஸ்டர் படத்திற்கு ஏன் இத்தனை தடை, ஒரு ரசிகனாக தன்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
கடைசி சிரிப்பு
கொரோனா தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும் அபாயத்தை பார்த்தால், இப்போதைக்கு மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை என்ற மனநிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது படக்குழு எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டு கடைசி சிரிப்பு என மிகவும் உருக்கத்துடன் ரத்னகுமார் பதிவிட்டுள்ளது விஜய் ரசிகர்களை கண்ணீர் மல்க வைத்திருக்கிறது.
பாதுகாப்பு முக்கியம்
தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் என நட்சத்திர பட்டாளமே நடித்த மாஸ்டர் படம் வெளியாகவில்லை என்ற சோகத்தை பகிர்ந்த ரத்னகுமார், இந்த நேரத்தில் கொண்டாட்டத்தை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
உயிரோட இருப்போமான்னே தெரியல
ரத்னகுமாரின் இந்த நெகிழ்ச்சிப் பதிவை பார்த்த தளபதி ரசிகர்கள், எதற்கும் கவலைப்படாதீங்க ப்ரோ, தளபதிக்காக எவ்ளோ நாள் வேணாலும் காத்துட்டு இருப்போம் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், சிலர், படம் ரிலீசாகும் வரை உயிரோடு இருப்போமான்னே தெரியல, அட்லீஸ்ட் டிரைலரையாவது பார்த்து நிம்மதி அடைகிறோம் என உருக்கமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
|
இதுவே அப்டேட் தான்
இப்படி ரத்னகுமார் சீரியஸாக ஒரு ட்வீட் போடுகிறார் என்றால், நிச்சயம் இன்று மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலர் நிச்சயம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதற்கான மறைமுகமான சிக்னல் தான் இந்த ட்வீட் என ரத்னகுமாருக்கு ரசிகர்கள் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.