Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படத்தின் அரசியல் தொந்தரவு செய்தால் நடிக்கவே முடியாது... சொல்கிறார் 'அஞ்சான்' வில்லன்
மும்பை: படத்தின் அரசியல் என்னை தொந்தரவு செய்தால், நடிக்கவே முடியாது என்று பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஷால் நடித்த சமர், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படங்களில் வில்லனாக நடித்திருந்தவர் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் பலத்த வரவேற்பை பெற்றது. தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துவருகிறார்.
தேசிய விருது
ராம் கோபால் வர்மா, 1998 ஆம் ஆண்டு இந்தியில் இயக்கிய சத்யா படத்தில் நன்றாக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர். பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள இவர், காந்தி பற்றிய குறும்படம் ஒன்றில் இப்போது நடித்து முடித்துள்ளார்.
காந்திய சிந்தனைகள்
இதுபற்றி அவர் கூறும்போது, இன்றைய இளம் தலைமுறையினருக்கு காந்திய சிந்தனைகள் குறித்து குறித்தும் தெரியாமல் இருக்கிறது. அதை தெரியபடுத்தும் விதமாக உருவாக்கப் பட்டிருக்கிறது இந்த குறும்படம். நாகரிக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அகிம்சை, பேச்சுவார்த்தை, விவாதங்கள் மட்டுமே இறுதியில் வெற்றிபெறும்.
சகிப்புத்தன்மை
மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத, சகிப்புத்தனமையற்ற மோசமான காலகட்டத்தில் இப்போது நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. அதனால்தான் அந்த படத்தில் நான் நடித்தேன் என்கிறார் மனோஜ் பாஜ்பாய்.
படத்தின் அரசியல்
அவர் மேலும் கூறும்போது, நான் நடிக்கும் படத்தின் அரசியல் என்னை தொந்தரவு செய்தால், அதில் நடிக்க மாட்டேன். ஸ்கிரிப்ட் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரி, நான் முழுமையாக உடன்படவில்லை என்றால் நடிக்கமாட்டேன். நான் நம்பாத ஒன்றை செய்கிறேன் என்று உணர்ந்தால் அதில் என்னால் நடிக்க முடியாது. அதை சினிமாவாக மட்டும்தான் பார்ப்பார்கள் என்று நினைத்தால், நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.