Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீங்க உண்மையான தமிழனா இருந்தா என் படத்தை நெட்டில் போடாதீங்க - ஜெயம் ரவி உருக்கம்: வீடியோ
நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் என் படத்தை நெட்டில் அப்லோட் செய்யாதீர்கள் என நடிகர் ஜெயம் ரவி 'வனமகன்' செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சென்னை: உண்மையான தமிழனாக இருந்தால் வனமகன் திரைப்படத்தில் நெட்டில் ஏற்றாதீர்கள் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவி, சயீஷா சைகல் நடித்த வனமகன் திரைபடம் நாளை வெளியாகிறது. சிலதினங்களுக்கு முன் வனமகன் திரைபப்டத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் விஜய் மிகவும் சின்சியராக இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவரால் மட்டுமே இம்மாதிரியான உழைப்பை கொடுக்க முடியும். அவர் என் அண்ணன் போன்றவர் என ஏகத்துக்கும் புகழ்ந்தார்.
அதுமட்டுமில்லாமல், என்னுடன் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார்கள் என்று சொல்வார்கள். இப்படத்தின் ஹீரோயின் சயீஷா சைகல் நிச்சயமாக பெரிய உயரத்துக்கு செல்வார் என கூறியதில் ஹீரோயின் ரொம்பவும் மகிழ்ந்தார்.
மேலும், வனமகன் திரைப்படத்தை நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் நெட்டில் அப்லோட் செய்யாதீர்கள் என்றார். இது கொஞ்சம் புதிய கோரிக்கையாக இருந்தது.
பொதுவாக, வாட்ஸ் அப், முகநூலில் நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும் என்று தான் வரும். ஜெயம் ரவி, அதற்கு எதிராக கூறியுள்ளார். ஆனால், உண்மையான தமிழர்களுக்கு இது சோதனைதான் என வழக்கம் போல் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.