Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
Ilayaraja 75: இதெல்லாம் நீ சொல்லணும்: ரஹ்மானிடம் இளையராஜா செல்லக் கோபம்
Recommended Video
சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ரஹ்மானிடம் செல்லக் கோபம் கொண்டார்.
இளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் ராஜா சாரும், ரஹ்மானும் பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாது.
விழா மேடையில் இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும்.
ரஹ்மான்
சின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டார். ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா.
அப்பா
அப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா ரஹ்மானை பார்த்து கேட்க அவரும் ஆமாம் சார் என்றார். இதை எல்லாம் நீ சொல்லணும் ஆனால் நீ சொல்ல வேண்டியதை எல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று இளையராஜா கூற அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினார்கள்.
சிரிப்பு
விழா மேடையில் இளையராஜா செல்லக் கோபம் கொண்டதை பார்த்த ரஹ்மானுக்கு மகிழ்ச்சி. குரு தன்னை உரிமையுடன் கேள்வி கேட்பது, திட்டுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது போன்று. அவர் முகத்தில் ஒரே வெட்கம் வேறு.
மகிழ்ச்சி
இளையராஜா, ரஹ்மான் மேடையில் பேசிக் கொண்டதையும், ராஜா சார் திட்டியதையும், இசைப்புயல் திட்டு வாங்கியதையும் பார்த்து ரசித்தவர்களே அதிகம்.