Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்
Recommended Video
டெல்லி: நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதினை இன்று இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத் ரத்னா. அதற்கு அடுத்த நிலையில் இருப்பது பத்மவிபூஷண். இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது, நாட்டின் ஒப்பற்ற இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றவர் இளையராஜா. ஏற்கெனவே பத்மபூஷண் விருதினையும் அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை இன்று டெல்லியில் நடந்த விழாவில் இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பத்ம விருதுகள் பெற்ற வேறு சில கலைஞர்கள், பிரமுகர்களுக்கும் இன்று குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கினார்.