Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
சீஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் துறை தூதராக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்துள்ளது அந்நாட்டு அரசு.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 155 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு சீஷெல்ஸ். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டில் இந்தியர்கள் ஏராளமாக வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களும் உள்ளனர். சுற்றுலாதான் இந்த நாட்டின் முக்கிய வருமானம்.
சீஷெல்ஸ் தீவை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத்குமார். தனது ரகசிய போலீஸ் 115 படத்தை இங்குதான் படமாக்கினார் அவர்.
சீஷெல்ஸ் தீவுக்கும் தமிழகத்துக்கும் கலாச்சார ரீதியான நல்லுறவு நிலவி வருகிறது.
சீஷெல்ஸ் அரசு இந்த ஆண்டு நடத்தும் கலை பண்பாட்டு கலாச்சார விழாவில் நான்கு நாட்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவை அழைத்திருந்தது.
தலைநகர் விக்டோரியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இளையராஜா.
விழாவில் சீஷெல்ஸ் நாட்டின் சுற்றுலாத் துறை தூதராக இளையராஜாவை நியமிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை இளையராஜாவும் ஏற்றுக் கொண்டார்.