ரஜினி, வைரமுத்து சர்ச்சை கேள்விகளை அமைதியாகக் கடந்து சென்ற இளையராஜா!
Recommended Video

பதில் சொல்லாமல் போன இளையராஜா- வீடியோ
திருமலை (திருப்பதி): திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார் இசைஞானி இளையராஜா.
தரிசனம் முடித்துவிட்டு அவர் கோயிலுக்கு வெளியில் வந்தபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். தான் அங்கு தரிசனத்துக்கு வந்திருப்பதாகக் கூறி அவர்களை தாண்டிச் செல்ல முயன்றார் இளையராஜா.

அப்போது அவரிடம், நடிகர் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் கூறவில்லை. எந்த வித ரியாக்ஷனையும் வெளிப்படுத்தாமல் திருமலையிலிருந்து சென்று விட்டார் இளையராஜா.
1980ல் வைரமுத்துவை ஒரு பாடலாசிரியராக அறிமுகம் செய்தவர் இளையராஜா. 1987-க்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
Comments


Click it and Unblock the Notifications