Don't Miss!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரதமர் மோடி தாயாரின் ஆன்மா சாந்தியடைய இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு!
சென்னை : பிரதமர் மோடி தாயாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். தாயின் உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கில் மோடி கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஜப்பான் பிரதமர், நேபாளத்தின் பிரதமர், மத்திய அமைச்சர்கள், குஜராத் முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்,திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர்.
காந்தி
குல்லாவுடன்
இளையராஜா…
கவுரவ
டாக்டர்
பட்டம்
வழங்கிய
பிரதமர்
மோடி

பிரதமர் மோடியின் தாயார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ந் தேதி யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், நேற்று அதிகாலை 3.39 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள்
இதையடுத்து, பிரதமர் மோடி குஜராத்திற்கு விரைந்து சென்று தாயார் ஹீராபென்னுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, மோடி உருக்கமான ட்வீட் பதிவில், ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா, ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது என குறிப்பிட்டிருந்தார்.

எதையும் எதிர்பார்க்காத தாய்
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், இசையமைப்பாளரும் எம்.பி.யுமான இளையராஜா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். அதில், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைகிறேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவுமே கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறேங்கும் காணமுடியுமோ? அவர் மறைந்தது துயரமே நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எழுதி இருந்தார்.

தீபம் ஏற்றி வழிபாடு
மேலும், பிரதமர் மோடி தாயாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.