Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மருத்துவமனையிலிருந்து திரும்பினார் இளையராஜா... நேராக குற்றமே தண்டனை ரெகார்டிங்குக்கு சென்றார்!
மருத்துவமனையில் இரு தினங்கள் ஓய்வில் இருந்த இளையராஜா, இன்று அங்கிருந்து பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து வந்த கையோடு, குற்றமே தண்டனை படத்தின் இசைப் பதிவில் பங்கேற்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா இரு தினங்களுக்கு முன் தனது இணையதளம் மற்றும் யுட்யூப் சேனலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார். இதற்கான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிறகு, உடல் சோர்வாக இருந்ததால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா அறிவித்திருந்தார்.
அவருக்கு நெஞ்சு வலி என தகவல் பரவியது. ஆனால் உண்மையில், தொடர்ச்சியான மீடியா சந்திப்பு காரணமாக களைப்புற்ற அவருக்கு, லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில், இரு தினங்கள் ஓய்வெடுத்த பிறகு இளையராஜா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.
ஆனால் அவர் நேராக வீட்டுக்குச் செல்லாமல், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தார். அங்கு காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.