Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்! - இளையராஜாவிடம் சொன்ன கே விஸ்வநாத்
கே விஸ்வநாத்... தென்னிந்திய திரையுலகின் சாதனை இயக்குநர். இவரும் இளையராஜாவும் இணைந்த படங்கள் இசைக் காவியங்கள்.
சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல படங்களைச் சொல்லலாம்.
சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) படத்தின் இசைச் சேர்ப்பு வேலைகளின்போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார் இளையராஜா.
அவர் கூறுகையில், "ஸ்வாதி முத்யம் அதாவது சிப்பிக்குள் முத்து படத்தின் போது ஒரு காட்சியை எடுத்து வந்து பின்னனி இசைக்காக கொடுத்திருந்தார் விஸ்வநாத்.
அந்த காட்சி மாடியிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் இறங்கிவருவது் போன்றும் அதை ராதிகா பர்ப்பது போன்றும் காட்சி. இதற்கு பின்னனி இசை வரவேண்டும் என்று அவர் சொல்ல, நான் இல்லை இந்த இடத்தில் இசை வராது என்று நான் இசையமைக்காமல் அந்த இடத்தை சைலண்டாக விட்டு வைத்தேன்.
அங்கே மியூசிக் போடணும் என்றார் விஸ்வநாத். காரணம் கேட்டேன். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கிறது. அதைக் காட்ட வேண்டும் என்றார்.
'படமே இங்குதான் ஆரம்பிக்கிறது... ரசிகர்களுக்கு அது எப்படி தெரியும்.. கதை எழுதிய உங்களுக்குதான் தெரியும். ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே,' என்றேன்.
நான் சொன்னதில் இருந்த நியாயத்தைபப் புரிந்து கொண்டு விஸ்வநாத், 'இது எப்படி எனக்குத் தெரியாமல் போனது.. இனி படம் முடியும் வரைக்கும் நான் உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்," என்று ரெக்கார்டிங் தியேட்டர் பக்கமே வராமல் இருந்தார்."
ராஜா இப்படிச் சொல்லி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மத்தியில் கரகோசம்!