twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்! - இளையராஜாவிடம் சொன்ன கே விஸ்வநாத்

    By Shankar
    |

    கே விஸ்வநாத்... தென்னிந்திய திரையுலகின் சாதனை இயக்குநர். இவரும் இளையராஜாவும் இணைந்த படங்கள் இசைக் காவியங்கள்.

    சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல படங்களைச் சொல்லலாம்.

    சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) படத்தின் இசைச் சேர்ப்பு வேலைகளின்போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார் இளையராஜா.

    Ilaiyaraaja's experience with K Vishwanath

    அவர் கூறுகையில், "ஸ்வாதி முத்யம் அதாவது சிப்பிக்குள் முத்து படத்தின் போது ஒரு காட்சியை எடுத்து வந்து பின்னனி இசைக்காக கொடுத்திருந்தார் விஸ்வநாத்.

    அந்த காட்சி மாடியிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் இறங்கிவருவது் போன்றும் அதை ராதிகா பர்ப்பது போன்றும் காட்சி. இதற்கு பின்னனி இசை வரவேண்டும் என்று அவர் சொல்ல, நான் இல்லை இந்த இடத்தில் இசை வராது என்று நான் இசையமைக்காமல் அந்த இடத்தை சைலண்டாக விட்டு வைத்தேன்.

    அங்கே மியூசிக் போடணும் என்றார் விஸ்வநாத். காரணம் கேட்டேன். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கிறது. அதைக் காட்ட வேண்டும் என்றார்.

    'படமே இங்குதான் ஆரம்பிக்கிறது... ரசிகர்களுக்கு அது எப்படி தெரியும்.. கதை எழுதிய உங்களுக்குதான் தெரியும். ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே,' என்றேன்.

    நான் சொன்னதில் இருந்த நியாயத்தைபப் புரிந்து கொண்டு விஸ்வநாத், 'இது எப்படி எனக்குத் தெரியாமல் போனது.. இனி படம் முடியும் வரைக்கும் நான் உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்," என்று ரெக்கார்டிங் தியேட்டர் பக்கமே வராமல் இருந்தார்."

    ராஜா இப்படிச் சொல்லி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மத்தியில் கரகோசம்!

    English summary
    Recently Ilaiyaraaja has shared one of his experiences with legendary director K Vishwanath during the compositions of Swathy Muthyam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X