Just In
- 7 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 7 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 8 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 9 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பை போல்போட்டிருக்காங்க.. வக்கீல் அதிர்ச்சித் தகவல்
சென்னை: இளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பைப் போல் போட்டு வைத்திருப்பதாக இளையராஜாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வந்தார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்த இடத்தை பயன்படுத்தி வந்தார்.

பிரசாத் ஸ்டூடியோ
அந்த பகுதியை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜா போலீசில் புகார் செய்தார். இது பரபரப்பானது.

வருகை ரத்து
பின்னர் சமாதானம் ஆனது. அதன்படி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று காலை வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இது தொடர்பாக அவருடைய செய்தி தொடர்பாளர், இளையராஜா வருவது ரத்து செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அறையை காணவில்லை
இந்நிலையில் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, பிரசாத் ஸ்டூடியோவில், இளையராஜா பயன்படுத்திய அறையை காணவில்லை. அதில் இருந்த பொருட்கள் அங்கு இல்லை. அவர் வாங்கிய பத்மபூஷன் விருது கூட அந்த அறையில்தான் இருந்தது.

மியூசிக்கல் நோட்ஸ்
அவருடைய மியூசிக்கல் நோட்ஸ், முக்கியமான புகைப்படங்கள் உட்பட பல ஆவணங்கள் அங்கு இருந்தது. அவற்றை அங்கிருந்து வேறொரு இடத்தில் குப்பை போல் போட்டு வைத்துள்ளனர். இதுபற்றிய தகவலை இளையராஜாவிடம் சொன்னோம். அந்த அறையே இல்லை என்றால் நான் என்ன செய்வது?

மன வருத்தம்
பிறகு ஏன் நான் அங்கு வரவேண்டும்? என்று இளையராஜா வரவில்லை. அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை இளையராஜாவுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.