Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முத்துராமலிங்க தேவர் பயோபிக்.. இசை அமைக்கிறார் இளையராஜா.. படக்குழு தகவல்!
சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கைக் கதைக்கு இளையராஜா இசை அமைக்க இருக்கிறார்.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாக எடுப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது.
அது போன்ற பயோபிக் கதைகள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவதால் அதை எடுக்க சினிமா துறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
என்ன 'நான்சென்ஸ்' இதெல்லாம்.. அஜித்தையும் என்னையும் பற்றி தப்பா பேசுவதா.. பொங்கிய பைக் ரேஸர்!
தற்போதும் பல விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் பற்றிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஜெ.எம்.பஷீர், தேவராக நடிக்கிறார். இவர், குற்றாலம் மற்றும் அராத்து படங்களில் நடித்தவர். படத்தை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். 'ஊமை விழிகள்' அரவிந்தராஜ் இயக்குகிறார்.
தேவரின் சிஷ்யரான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய 'முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் அதில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்னைகள் முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பஷிர், ஊரடங்கு ஆரம்பமான மார்ச் மாதத்தில் இருந்து கடந்த 4 மாதத்திற்கும் மேலாக, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தினமும் உணவு கொடுத்து வருகிறார்.