கோவையில் 23ம் தேதி இளையராஜா ரசிகர்களின் சங்கமம்!

இளையராஜாவுக்காகவே பிரத்யேகமாக யாஹு ரசிகர் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 26 முறை இந்த குழுமம் சார்பில் ரசிகர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. 25வது கூட்டம் சென்னையிலும், 26வது கூட்டம் சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு நடைபெற்றது.
இந்தநிலையில் 2012ம் ஆண்டை வசந்தமான ஆண்டாக முடிக்கும் வகையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்களை கலந்துரையாடல் பொருளாக வைத்து ஒரு கூட்டத்தை கோவையில் கூட்டியுள்ளனர். 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவை, வேலாண்டிப்பாளையத்தில் உள்ள ஓவியா மெட்சேப் பிரைவேட் லிமிட்டெட் என்ற இடத்தில் கூட்டம் நடைபெறும்.
விசேஷம் என்னவென்றால், இளையராஜா கோவையில் அன்றைய தினம் முகாமிடுகிறார் என்பதுதான். 23ம் தேதி மாலை இந்துஸ்தான் கலை, அறி்வியல் கல்லூரியில் இசைமாலை என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளையராஜா கலந்து கொள்கிறார். மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்பாடு செய்துள்ள விஷ்ணுபுரம் விருதுகள் -2012 நிகழ்ச்சியிலும் இளையராஜா பங்கேற்கிறார்.
இதையொட்டி ரசிகர்களின் சந்திப்புக்கு குழும நிர்வாகி டாக்டர் விஜய் வெங்கட்ராமன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் கலந்துரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள். இதுதவிர வேறு துணைப் பொருள் குறித்து விவாதிக்க விரும்புவோர் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விருப்பத்தை [email protected] என்ற முகவரிக்கு டிசம்பர் 21ம் தேதிக்குள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்டம் நடைபெறும் இடத்தின் முகவரி
Oviya MedSafe Pvt. Ltd.,
2nd Floor, KTVR Gardens,
220-a3, Marudha Konar Road,
Velandipalayam,
Coimbatore - 641 025.
Phone: 0422-2444442.


Click it and Unblock the Notifications











