லண்டனில் குழுமும் இளையராஜா ரசிகர்கள்... 29வது சந்திப்பு!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் யாஹு குழும ரசிகர்கள் கலந்துரையாடல் அடுத்து லண்டனில் நடக்கப் போகிறது. ஹூத்ரூவில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
மார்ச் 2ம் தேதி லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரம், கால அளவு, கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று யாஹு குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இளையராஜாவின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் இளையராஜா யாஹு குழுமம், கடந்த பல வருடங்களாக அவ்வப்போது கூடி இளையராஜாவின் பாடல்கள், இசை குறித்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் 28வது இளையராஜா யாஹு குழுமக் கூட்டம் நடந்தது. அதில் பெரும் திரளானோர் கூடி அருமையான கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது 29வது கலந்துரையாடல் லண்டனில் நடைபெறப் போகிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் ராஜா ரசிகர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இசைஞானி குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்று குழும நிர்வாகிகள் அழைத்துள்ளனர்.
இளையராஜா யாஹு குழுமத்தில் இணையவும், மேலும் தகவல்களை அறியவும் http://groups.yahoo.com/group/ilaiyaraaja என்ற முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











