Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பழசை மறந்து ஒன்று சேர்ந்த இளையராஜா, எஸ்.பி.பி.: வைரல் புகைப்படங்கள்
Recommended Video
சென்னை: இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அனைத்துமே அருமை. அவர்களின் கூட்டணி என்றுமே வெற்றிக் கூட்டணி. இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.
தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என்று இளையராஜா கறாராக தெரிவித்தார்.
ஏக்கம்
இளையராஜா தடை விதித்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை தொடர்ந்து பாடுவேன் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். நல்ல நண்பர்களாக இருந்த அவர்கள் பிரிந்ததை பார்த்து ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
எஸ்.பி.பி.
இவிபி பிலிம் சிட்டியில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பாட உள்ளார். இந்த நாளுக்காகத் தான் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி
இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து கட்டிப்பிடித்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதை பார்த்த தீவிர ரசிகர்களுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
கடவுள்
இவிபி பிலிம் சிட்டி நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட வேண்டும் என்று ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. கடவுள் இருக்கான் குமாரு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.