Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
என்ன நடக்குமோ நடக்கட்டும்: இளையராஜா விவகாரம் குறித்து எஸ்.பி.பி. வருத்தம்
Recommended Video
சென்னை: இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து பாடுவது குறித்து பேசியுள்ளார் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
தனது பாடல்களை தனது அனுமதி இன்றி இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இளையராஜாவின் பாடல்களை பாடுவதை நிறுத்திய எஸ்.பி.பி. மீண்டும் துவங்கிவிட்டார்.
அனுமதி
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை மீண்டும் பாடத் துவங்கிய நிலையில் இளையராஜா மீண்டும் கண்டித்துள்ளார். அதாவது தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடக் கூடாது, மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.
இளையராஜா ராயல்டி கேட்டு மீண்டும் எச்சரித்துள்ளது குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது, இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என்றார்.
வருத்தம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் என்றால் அவரிடம் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்களை பாடுமாறு தான் ரசிகர்கள் அதிக அளவில் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்நிலையில் ராயல்டி பிரச்சனையால் இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத நிலையில் இப்படியாகிவிட்டது.
கவலை
ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பார்த்து இருவரின் ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.