Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
இளமி... ஜல்லிக்கட்டுக்காக ஒரு படம்!
ஜல்லிக்கட்டு, அதன் வரலாற்றைப் பின்னணியாக வைத்து ஒரு புதிய படம் உருவாகிறது, இளமி என்ற பெயரில்.
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் சாட்டை யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். 1700 ஆண்டு கால கட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக யுவன் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார்.
நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். கல்லூரி அகில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - யுகா.எம்.
பழனிபாரதி, ஜீவன் மயில், ராஜா குருசாமி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குநர் ரவிமரியாவின் உதவியாளர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இளமி பற்றி இயக்குநரிடம் கேட்டோம்...
"எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம். ஏன் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் உள்ள இளைஞர்களை பற்றிய கதை இது.
மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்றவற்றை தவிர்ப்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்து படப் பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம். இளமி இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது.
படப்பிடிப்பு தேனிமாவட்டத்தில் குரங்கணி, தலக்கோணத்தில் நரபைலு என்ற இடத்திலும் இரண்டு ஊர் அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்.
மறக்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் திரையில் புதுப்பிக்கிறோம்," என்றார் ஜூலியன் பிரகாஷ்.