twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா சுகவீனம்.. அப்பல்லோவில் தீவிரப் பரிசோதனை

    By Shankar
    |

    ilayaraaja
    சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இப்போது நார்மலாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. இது சினிமா உலகை மட்டுமல்ல, அவரது பல கோடி அபிமானிகளையும் அதிர வைத்தது.

    இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம்.

    இளையராஜாவுக்கு லேசான நெஞ்சுவலிதான் என்றும், இப்போது ஐசியுவில் நார்மலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறித்த சோதனைகள் அனைத்தும் முடிந்தபிறகு ஆஞ்சியோகிராம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

    அதுவரை இளையராஜா கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தலைமை மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார்.

    English summary
    Appollo hospital administration says that Ilayaraja's health condition is stable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X