குணமடைந்தார் இளையராஜா- விரைவில் வீடு திரும்புகிறார்!

கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவந்த இளையராஜா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இளையராஜா இப்போது தன் அறைக்குள்ளேயே நடமாட ஆரம்பித்துள்ளார்.
தற்பொழுது பூரண குணமாகியுள்ளதால் இன்றோ அல்லது நாளை காலையோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments


Click it and Unblock the Notifications