Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா
சென்னை: இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையராஜா.
இத்துவக்கம் குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ரசிகர் பெருமக்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த பொங்கல் திருநாளில் இருந்து இணையதள தொலைக்காட்சி, ரேடியோ, ONLINE STORE ஆகியவை ஆரம்பமாகிறது. இணையதள ரேடியோவில் 24 மணி நேரமும் என் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இணையதள தொலைக்காட்சியிலும் அப்படித் தான்.
ONLINE STORE-ல் என்னுடைய ரசிகர்கள் என்னிடம் இருந்து நேரடியாக பாடல்களை வாங்கிக் கொள்ளலாம், நேரடியாக பெறுவதற்கு இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. பாடல்கள் பதிவிறக்கமாகவும், சி.டி.க்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். அந்த நோக்கத்திற்காகத் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இணையதள தொலைக்காட்சி மூலமாக நீங்கள் என்னுடன் இணைந்தே இருக்கலாம். நானும் அடிக்கடி உங்களுடன் எனது நினைவுகளையும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.