Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு.. அடுத்த இசை நிகழ்ச்சி எப்போ நடக்கப் போகுது தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவானான இளையராஜா கடந்த மார்ச் மாதம் ராக் வித் ராஜா எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னைத் தீவுத் திடலில் நடத்தினார்.
நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்டு பாட்டுப் பாடி அசத்தினார். மேலும், துபாய் எக்ஸ்போவில் ஒரு நிகழ்ச்சி, மகன் யுவன் சங்கர் ராஜாவின் 25வது நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் இளையராஜா.
போட்ட மியூசிக்கையே போடுறாங்களே.. கேட்கமாட்டீங்களா? இசையமைப்பாளர்களை விளாசிய இளையராஜா!
குறையாத இசை
78 வயதிலும் குறையாத இசையாக நம்மிடையே நடமாடி வருகிறார் இளையராஜா. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவரை இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் இசை அரசன் என்றும் பல பட்டப் பெயர்களை வைத்து அழைத்து வருகின்றனர். சிறுவயதில் கையில் பிடித்த ஹார்மோனியப் பெட்டியை இன்னமும் விடாது புதிய புதிய இசையை கொடுத்து செவிக்கு விருந்து படைத்து வருகிறார்.
ராக் வித் ராஜா
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இசை நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, சர்வதேச திரைப்பட விழா என பல சினிமா திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி ராக் வித் ராஜா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
யுவன் 25
சமீபத்தில் மகன் யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை பிளாக்ஷீப் யூடியூப் சேனல் உடன் இணைந்து கொண்டாடினார்கள். இளையராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மகனை வாழ்த்தினார். மேலும், புதிய இசையமைப்பாளர்கள் போட்ட ட்யூனையே போடுறாங்களே.. கேட்க மாட்டீங்களா என ரசிகர்களையும் கொம்பு சீவி விட்டு பல இளம் இசையமைப்பாளர்களை மேடையில் கலாய்த்து விட்டார்.
இளையராஜா அறிவிப்பு
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை (மே 18) மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியின் அறிவிப்பு வரப் போகிறது என ட்வீட் போட்டிருக்கிறார். மேலும், வரும் ஜூன் 5ம் தேதி நடைபெறப் போகும் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு தான் என நிகழ்ச்சி நடக்கப் போகும் தேதியையும் குறிப்பிட்டு இருக்கிறார் இளையராஜா.