Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடன் பாக்கியை மறக்காமல் கேட்ட இளையராஜா: விழுந்து விழுந்த சிரித்த ரஜினி
சென்னை: ரஜினிகாந்த் எனக்கு கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இசைஞானியை வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறியதாவது,
ரஜினி
என் பிறந்தநாள் அன்று ரஜினிகாந்த் மும்பையில் இருந்தார். காலையிலேயே போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். 74 வயதை தொடுவது பெரிய விஷயம் என்று கூறி வாழ்த்தினார்.
கடன்
நீங்கள் எனக்கு ஒரு டீ வாங்கிக் கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. எப்பொழுது வாங்கித் தருவீர்கள் என்று நான் கேட்டதும் ரஜினி விழுந்து விழுந்து பத்து நிமிடம் சிரித்தார்.
டீ
நான் மும்பையில் இருந்து சென்னை திரும்பி வந்தவுடன் கண்டிப்பாக டீ வாங்கிக் கொடுக்கிறேன் என்று ரஜினிகாந்த் எனக்கு வாக்குறுதி அளித்தார்.
கமல்
எனக்கு பிறந்தநாள் விழா என்றதும் நான் நேரில் வந்து ராஜா சாரை வாழ்த்துவேன் என்று கமல் ஹாஸன் தானாக வந்து வாழ்த்தினார் என இளையராஜா தெரிவித்துள்ளார்.