Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல் 60: இப்போ மட்டும் உங்களுக்கு கேட்காதே.. கமலை கிண்டல் செய்த இளையராஜா!
Recommended Video
சென்னை: கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இளையராஜா கிண்டல் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உச்ச நடிகராக உயர்ந்திருக்கிறார். 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சி
இதேபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
வரவேற்பு
உங்கள் நான் எனும் இந்த பிரமாண்ட விழாவில் கமலுடன் 80களில் ஜோடியாக நடித்த பல கதாநாயகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சகோதரிகளான அம்பிகாவையும் ராதாவையும் நடிகர் கமல்ஹாசன், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று வரவேற்றார்.
கன்னத்தில் முத்தமிட்ட ராதா
அப்போது அம்பிகா, கமலுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். ஆனால் நடிகை ராதா கமலை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர்.
அவசர அழைப்பு
இதனை மேடையிலிருந்து கவனித்த இளையராஜா, கமல் சார் என அவசரமாக அழைத்தார். ஆனால் அது கமலுக்கு கேட்காததால் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
கிண்டலடித்த இளையராஜா
இதையடுத்து இப்போதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்காதே என்று கிண்டலாக கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
இதனை தொடர்ந்து மீண்டும் சத்தமாக அழைத்த இளையராஜா அதே மூடில் என்னுடன் வந்து பாடுப்பாடுங்கள் என்று கூறினார். இதையடுத்து மேடைக்கு சென்ற கமல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை பாடி அசத்தினார்.