Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமல் 60: இப்போ மட்டும் உங்களுக்கு கேட்காதே.. கமலை கிண்டல் செய்த இளையராஜா!
Recommended Video
சென்னை: கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இளையராஜா கிண்டல் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உச்ச நடிகராக உயர்ந்திருக்கிறார். 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சி
இதேபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
வரவேற்பு
உங்கள் நான் எனும் இந்த பிரமாண்ட விழாவில் கமலுடன் 80களில் ஜோடியாக நடித்த பல கதாநாயகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சகோதரிகளான அம்பிகாவையும் ராதாவையும் நடிகர் கமல்ஹாசன், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று வரவேற்றார்.
கன்னத்தில் முத்தமிட்ட ராதா
அப்போது அம்பிகா, கமலுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். ஆனால் நடிகை ராதா கமலை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர்.
அவசர அழைப்பு
இதனை மேடையிலிருந்து கவனித்த இளையராஜா, கமல் சார் என அவசரமாக அழைத்தார். ஆனால் அது கமலுக்கு கேட்காததால் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
கிண்டலடித்த இளையராஜா
இதையடுத்து இப்போதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்காதே என்று கிண்டலாக கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
இதனை தொடர்ந்து மீண்டும் சத்தமாக அழைத்த இளையராஜா அதே மூடில் என்னுடன் வந்து பாடுப்பாடுங்கள் என்று கூறினார். இதையடுத்து மேடைக்கு சென்ற கமல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை பாடி அசத்தினார்.