Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மே 4-ல் திருவண்ணாமலையில் கூடும் இளையராஜா ரசிகர்கள்!
சென்னை: இளையராஜாவின் யாஹூ குழும ரசிகர்கள் தங்களின் 30வது சந்திப்பை வரும் மே 4-ம் தேதி திருவண்ணாமலையில் நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை ரமணாஸ்மரமத்துக்கு எதிரில் உள்ள ரமணா டவர்ஸில் இந்த சந்திப்பு நடக்கிறது.
இளையராஜாவின் ரசிகர்கள் யாஹூ க்ரூப்ஸில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த குழு இது. இதுவரை பல்வேறு ஊர்களில் ரசிகர்கள் சந்திப்பு நடத்தி, ராஜாவின் பாடல்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில் ராஜா ரசிகர்களின் 30வது சந்திப்பு இது. தங்களது குழுவின் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் இந்த சந்திப்பை நிகழ்த்துகின்றனர்.
வரும் மே 4, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு மரியாதை செய்யும் வகையில் 'இளையராஜாவும் பாலு மகேந்திராவும்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மூடுபனியில் தொடங்கி தலைமுறைகள் வரை இந்த இரு மேதைகளும் பணியாற்றிய படங்களின் பாடல்கள் பற்றி இந்த சந்திப்பில் கலந்துரையாடவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும். இளையராஜா - பாலு மகேந்திரா படங்களிலிருந்து எந்த படம் அல்லது பாடல் குறித்து பேசப் போகிறோம் என்பதையும் இந்த மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.
வரும் ஏப்ரல் 30-ம் தேதி, முற்பகல் 11.59 மணியுடன் முன்பதிவு முடிவடைகிறது.
இத்தகவை இளையராஜா யாஹூ குழும ரசிகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் விஜய் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி நடக்கும் இடம் - விலாசம்:
Ramana Towers,
10/J/1, Chengam Road,
4th Street,
Opp. Ramanashramam,
Thiruvannamalai - 606 603.
Tamil Nadu, India.
நிகழ்ச்சி நடக்கும் திருவண்ணாமலை, இளையராஜாவின் மனதுக்கு மிக நெருக்கமான இடமாகும். மாதம் ஒரு முறையாவது திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்குப் போய் தியானம் செய்வது ராஜாவின் வழக்கம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை