Don't Miss!
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கம் இப்போ வாங்கலாமா..?
- News இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்.. எகிறும் டென்ஷன்
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கரூர் வந்தார் இளையராஜா.. ராஜராஜசோழனின் போர்வாளுக்காக மக்கள் முன் மெட்டமைத்தார்!
கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா.
சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள்.
ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார்.
அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார்.
இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது, "அமைதியாக இருந்து இசையைக் கேளுங்க, உங்களுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன்," என்று கூறி கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார் இளையராஜா.