twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிங் ஆப் கிங்ஸ்... மலேசியாவில் இளையராஜாவின் புது இசை நிகழ்ச்சி!

    By Shankar
    |

    சென்னை: இளையராஜாவின் அடுத்த இசை நிகழ்ச்சி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது.

    அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இசைப் பயணம் செய்து வருகிறார் இளையராஜா.

    அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

    மலேசியா - சிங்கப்பூரில்

    மலேசியா - சிங்கப்பூரில்

    அடுத்து மலேசியா, சிங்கப்பூரில் உள்ள இசை ரசிகர்களுக்கு இசை விருந்து தருகிறார் இசைஞானி.

    80களில் லயிக்க வைத்த பாடல்கள்

    80களில் லயிக்க வைத்த பாடல்கள்

    இளையராஜா 1980-களில் இசையமைத்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை, அதுவும் இதுவரை எந்த மேடையிலும் பாடப்படாத பாடல்களைப் பாடும் இசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் டிசம்பர் 28-ந்தேதி நடக்கிறது.

    கார்த்திக் ராஜா - வெங்கட்பிரபு

    கார்த்திக் ராஜா - வெங்கட்பிரபு

    கார்த்திக்ராஜாவுடன் இணைந்து இயக்குநர் வெங்கட்பிரபுவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    ராஜா-யுவன்-பவதாரினி-கங்கை அமரன்

    ராஜா-யுவன்-பவதாரினி-கங்கை அமரன்

    இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரினி, கங்கைஅமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றனர்.

    எஸ்.பி.பி - ஹரிணி

    எஸ்.பி.பி - ஹரிணி

    எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஹரிணி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.

    கிங் ஆப் தி கிங்ஸ்

    கிங் ஆப் தி கிங்ஸ்

    இளையராஜாவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக 'கிங் ஆப் த கிங்ஸ்' என்ற பெயரில் இந்த இசை விழாவை நடத்துகின்றனர்.

    English summary
    Ilayarajaa's new music concert will be held in Malaysia on Dec 28th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X