ஃபாரின் மாப்ளதான் வேண்டுமா எனக் கேட்டவருக்கு நடிகையின் நச் பதில்!
நடிகை இலியான கலரைப் பார்த்து காதலிக்கவில்லை எனக் கூறியுள்ளார்
மும்பை: நடிகை இலியானா நாடு மற்றும் நிறத்தைப் பார்த்து காதலிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மும்பையில் பிறந்து மும்பையிலும் கோவாவிலும் வளர்ந்த நடிகை இலியானா. பாலிவுட் சினிமாவின் தலைநகரில் பிறந்திருந்தாலும் திரைத்துரைக்கு அறிமுகமானது தெலுங்குப் படங்களில் தான்.3

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகமாக நடித்துவரும் இலியானா தமிழில் கேடி மற்றும் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்துள்ளார். ஒல்லி பெல்லி அழகை அள்ளி அள்ளி கொஞ்சும் ரசிகர்கள் ஏராளம்.
ரவிதேஜாவுடன் இவர் நடித்துள்ள அமர் அக்பர் அந்தோணி திரைப்படம் வெளியாக உள்ளது. இலியானா இப்போது ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரீவ் நீபோனை காதலித்து வருகிறார்.
சமீபத்தில் இலியானா கர்ப்பமாக இருக்கிறார். ஆண்ட்ரீவை டேட் செய்ததற்கு பலனாக குழந்தை பெறப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
தன் காதலர் ஆண்ட்ரீவ்வின் பிறந்தநாளன்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு எப்படி வருடா வருடம் இன்னும் செக்ஸியாக மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்த ஆண்டு மிக மிக சிறப்பாக உங்களுக்கு இருக்கப்போகிறது. அதில் நானும் இருக்கிறேன் என நினைக்கையில் அதிர்ஷ்டக்காரியாக உணர்கிறேன் என உள்ளார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், வெளிநாட்டு நபரை ஏன் லைப் பார்ட்னராக தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு... நான் அவரின் உள்ளத்தை விரும்புகிறேன். அவர் எந்த நாடு என்ன நிறம் என்பதெல்லாம் முக்கியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











