Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ. 2 கோடிப்பு: இலியானாவை பார்த்து குமுறும் நடிகைகள்
ஹைதராபாத்: தெலுங்கு படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ள இலியானாவை பார்த்து சில நடிகைகள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. அப்பொழுதே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிய அவர் திடீர் என்று மூட்டையை கட்டிக் கொண்டு பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
டோலிவுட் போன்று பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
இலியானா
ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் இலியானா டோலிவுட்டுக்கு திரும்பி வந்துள்ளார். 6 ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த தெலுங்கு படத்தின் ஹீரோவும் ரவி தேஜா தான். முன்னதாக அவர்கள் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2 கோடி
அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் இலியானாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் அதிகம். அதனால் தான் அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
வியப்பு
பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்துள்ள ஒரு நடிகைக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்திருப்பது டோலிவுட் நடிகைகளை வியப்படைய வைத்துள்ளது. வழக்கமாக கம்பேக் நடிகைக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். இந்த இலியானாவுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலாம் நமக்கு கொடுக்காத சம்பளத்தை அவருக்கு கொடுக்கிறார்கள் என்று சில முன்னணி நடிகைகள் குமுறுகிறார்களாம்.
நியூயார்க்
அமர் அக்பர் அந்தோணி படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நகரில் துவங்கியது. படத்தை அக்டோபர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள், டப்பிங் தாமதமானதால் ரிலாஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது.