Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வாய்ப்புக்காக படுக்கை பற்றி பேசினால் அவ்ளோ தான்: இலியானா பரபரப்பு பேட்டி
Recommended Video
மும்பை: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை இலியானா.
பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என சில நடிகைகள் துணிச்சலாக பேட்டி கொடுத்துள்ளனர். படுக்கைக்கு போக மறுத்ததாலேயே பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை இலியானா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
கோழை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து யாராவது வெளியே சொன்னால் அவரின் கெரியர் அவ்வளவு தான். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் உண்மை.
தயாரிப்பாளர்
சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்கில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த பெண் என்னிடம் அறிவுரை கேட்டார். உங்களுக்காக நான் முடிவு செய்ய முடியாது என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.
முடியாது
யாருக்காகவும் யாரும் முடிவு எடுக்க முடியாது. என் முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. அந்த தயாரிப்பாளர் சொல்வதை கேட்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
நடிகைகள்
ஏ லிஸ்ட் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தால் பல நடிகைகள் முன்வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும். நடிகர்களை கடவுள் போன்று பார்க்கிறார்கள். அதனால் பெரிய நடிகர்களுக்கு வேறு ஒரு முகம் இருப்பதை நிரூபிக்க பலர் முன்வந்தால் மட்டுமே முடியும் என்கிறார் இலியானா.