இளையராஜாவின் இசை விருந்து இசைஞானி இளையராஜா முதல் முறையாக சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடி இசை நிகழ்ச்சியை நிடத்தினார்.ஜெயா டிவியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை நிகழ்ச்சி நடந்தது.இதுவரை நேரடியாக அதிக அளவில் இசை நகழ்ச்சிகளை நடத்தியிராத இளையராஜா முதல் முறையாக சென்னையில் இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு தனது மூத்த மகளுடன் விழாவுக்கு வந்திருந்தார். நடிகை ரோஜாவும் தனதுமகளுடன் வந்திருந்தார்.நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், பாடகிகள்சித்ரா, உமா ரமணன், சாதனா சர்கம், சொர்ணலதா, பவதாரணி, ஷ்ரேயா கோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுஇளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.இளையராஜா, மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து, தாய் மூகாம்பிகை படத்தில் வரும்ஜனனி ஜனனி பாடலைப் பாடி அனைவரையும் உருக வைத்தனர்.நடிகர் பார்த்திபன், பாடகி மகதி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்பவுள்ளது. அத்தோடு இளையராஜாவின் இசைத் தொடரையும் ஒளிபரப்புகிறது.

By Staff

இசைஞானி இளையராஜா முதல் முறையாக சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடி இசை நிகழ்ச்சியை நிடத்தினார்.

ஜெயா டிவியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை நிகழ்ச்சி நடந்தது.

இதுவரை நேரடியாக அதிக அளவில் இசை நகழ்ச்சிகளை நடத்தியிராத இளையராஜா முதல் முறையாக சென்னையில் இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு தனது மூத்த மகளுடன் விழாவுக்கு வந்திருந்தார். நடிகை ரோஜாவும் தனதுமகளுடன் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், பாடகிகள்சித்ரா, உமா ரமணன், சாதனா சர்கம், சொர்ணலதா, பவதாரணி, ஷ்ரேயா கோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுஇளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இளையராஜா, மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து, தாய் மூகாம்பிகை படத்தில் வரும்ஜனனி ஜனனி பாடலைப் பாடி அனைவரையும் உருக வைத்தனர்.

நடிகர் பார்த்திபன், பாடகி மகதி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்பவுள்ளது. அத்தோடு இளையராஜாவின் இசைத் தொடரையும் ஒளிபரப்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X