Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
S.P.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...இளையராஜா தலைமையில்
சென்னை : பத்மவிபூஷண்" பாடும் நிலா .S.P.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் 25.09.2021 சனிக்கிழமை இன்று காலை10.30 மணி அளவில் "பத்மவிபூஷண்" "இசைஞானி" இளையராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பல பாதிரியார்கள் சொன்ன மனகுமுறல்களே ருத்ர தாண்டவம்...அதிரடி காட்டிய இயக்குனர்
விழாவில் பொதுச்செயலாளர் ஜோனாபக்தகுமார். S.D. , தலைமையேற்க வந்திருக்கும் இசைஞானி அவர்களையும் , மும்பையிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த இசையமைப்பாளர் மற்றும் ஒலிப்பதிவாளர் உத்தம்சிங் , சம்மேளன தலைவர் R.K.செல்வமணி , S.P.B குடும்பத்தின் சார்பாக வந்திருந்த இசையமைப்பாளர் .வாசுராவ் அவர்களையும் வரவேற்றார்.
எஸ் பி பி- இசைஞானி நட்பு :
நிகழ்ச்சியில் இசைஞானி பேசும் போது அவருக்கும் S.P.B.கும் உள்ள தெய்வீக நட்பை மற்றும் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார் . தலைவர் தினா வந்திருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
மனிதத்தன்மை
எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள் இன்றும் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது .அவரது நினைவு நாளான இன்று பல ஊடகங்கள் பலவிதமான பாடல்களை அற்புதமான பதிவுகளாக எழுதி வருகின்றனர் அவர் பாடிய விதம், பழகிய விதம், மனிதத்தன்மை, இசை மீது கொண்ட ஆர்வம் போன்ற பல விஷயங்களை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணையதளத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
பாடல்களை பகிர்ந்து
எத்தனை காலங்கள் ஆனாலும் எஸ்பிபி என்கின்ற மிகப்பெரிய ஆளுமையை யாராலும் மறக்கவே முடியாது. அவரை நினைத்து நினைத்து வேதனை படுவதை விட அவரை நினைத்து நினைத்து அவரது பாடல்களை தொடர்ந்து பாடியும் அந்த பாடல்களை மற்றவர்களுக்கு சந்தோஷமாக உற்சாகமாக பகிர்ந்தும் வருகின்றனர்.
பல மாநிலங்களிலிருந்து
பழமொழிகளில் ரசிகர்களைக் கொண்டுள்ள எஸ்பிபி எல்லாத் தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திதுள்ளார். ஆகையால் அவருடைய நினைவு தினமான இன்று அவருக்கு பல மாநிலங்களிலிருந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் இசைஞானி இளையராஜா எஸ்பிபி அவர்களுக்கு கொடுத்த மரியாதை மிகவும் குறிப்பிடத்தக்கது.
இசை மீது காதல்
இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் எஸ்பிபி பாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவருக்கும் உண்டான நட்பு இசை மீது கொண்ட காதல் இருவரும் சேர்ந்து படைத்த படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை . ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிபி பற்றி பேசுவது என்பதைத் தாண்டி எஸ்பிபி பாடல்களை கேட்பதும் அவர் நடித்த படங்களை பார்ப்பதும் அவர் வாழ்ந்த வாழ்க்கையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்வதும் ஒரு சிறந்த செயலாகும்.