பண மோசடி: இளையராஜாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னையைச் சேர்ந்த பீட்டர்ஜான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், தான் தயாரித்தகூடல் நகர் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா, நடிகை மல்லிகா ஆகியோர் ரூ. 10 லட்சம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் இளையராஜாவின்வழக்கறிஞர் வாதிடுகையில், ஒப்புக் கொண்டபடி இளையராஜா இசையமைத்துக் கொடுத்து விட்டார். அவரது புகழைக்கெடுக்கும் வகையிலேயே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். போலீஸ் தரப்பிலும், யாரும் பண மோசடி செய்ததாக தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துவழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜா பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த பீட்டர்ஜான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், தான் தயாரித்தகூடல் நகர் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா, நடிகை மல்லிகா ஆகியோர் ரூ. 10 லட்சம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் இளையராஜாவின்வழக்கறிஞர் வாதிடுகையில், ஒப்புக் கொண்டபடி இளையராஜா இசையமைத்துக் கொடுத்து விட்டார். அவரது புகழைக்கெடுக்கும் வகையிலேயே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
போலீஸ் தரப்பிலும், யாரும் பண மோசடி செய்ததாக தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துவழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications