நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ரிலீஸில் பிரச்சனை: ரசிகர்கள் கவலை #Imaikkaanodigal
Recommended Video

சென்னை: நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தில் சில இடங்களில் இன்னும் ரிலீஸாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
அறிவித்தபடி சில இடங்களில் படம் வெளியாகவில்லை. மேலும் காலைக் காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிருப்தி
திட்டமிட்டபடி இமைக்கா நொடிகள் வெளியாகாத இடங்களில் இருக்கும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கேடிஎம் பிரச்சனையால் படம் ரிலீஸாகவில்லை என்றும், நிதி பிரச்சனை தீரவில்லை என்றும் கூறப்படுகிறது. நிதி பிரச்சனை என்றால் அதை கடைசி நிமிடம் வரை இப்படியா இழுத்தடிப்பது என்று ரசிகர்கள் நொந்துள்ளனர்.
சிங்கப்பூர்
அமெரிக்காவில் இமைக்கா நொடிகள் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் இன்றைய காட்சிகளுக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பிக்கவில்லை. என்ன நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் அதிருப்தி அடையச் செய்வது நியாயமில்லை. நிதி பிரச்சனை தான் காரணம் என் கேள்விப்பட்டாலும் இது சரி இல்லை என்று ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கிளியரன்ஸ்
இமைக்கா நொடிகள் கிளியரன்ஸுக்காக காத்திருக்கிறோம் என்று ரோஹினி சில்வர் ஸ்கிரீன்ஸின் ரேவந்த் சரண் ட்வீட்டியுள்ளார்.
இமைக்கா நொடிகள்
சிங்கப்பூரில் உள்ள ரசிகர்களால் இமைக்கா நொடிகள் படத்தை இன்று பார்க்க முடியவில்லை.
தீர்வு
#Imaikkaanodigal கேடிஎம் பற்றி இதுவரை அப்டேட் இல்லை. இரண்டு மணிநேரம் கழித்து தான் படம் ரிலீஸாகும் போன்று.


Click it and Unblock the Notifications











