Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இம்சை, பைடூ- தடை நீக்கம்!
இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட 8 படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழுஅனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலங்குகள் வதைத் தடுப்பு வாரியத்தின் அனுமதி கிடைத்தால்தான் படத்திற்குதணிக்கைச் சான்றிதழ் தர முடியும் என தணிக்கைக் குழு கூறி விட்டதால் இதைஎதிர்த்து ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந் நிலையில் இம்சைக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கக் கோரி நடிகர்வடிவேலு, முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
விலங்குகள் வதைத் தடுப்பு வாரியத்தின் தலைவர்தான் இதற்கு அனுமதி தரவேண்டுமாம். ஆனால் அந்த வாரியத்திற்கு இப்போது தலைவர் இல்லை,இனிமேல்தான் அவர் வர வேண்டுமாம்.
நாங்கள் படத்தில் குதிரையை கொடுமைப்படுத்தவில்லை. மிக அழகாகபயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம், விலங்குகள் வதைத்தடுப்பு வாரியம் எங்களதுபடத்துக்கு அனுமதி தருவார்கள்.
இச் சந்திப்பு நடந்தசில மணி நேரங்களில் இம்சை உள்ளிட்ட 8 படங்களுக்கான தடைநீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன்கூறுகையில்,முதல்வரின் முயற்சியால் இம்சை அரசன், பைடூ உள்ளிட்ட 8படங்களுக்குரிய தடை நீக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைத்து விடும். இதுகுறித்துதயாரிப்பாளர் ஷங்கரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.