Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதுக்குள்ள 15 வருஷம் ஆயிடுச்சா... என்றும் நம் நினைவுகளில் இம்சை அரசன் 23ம் புலிகேசி
சென்னை : வடிவேலுவின் இம்சையான காமெடி நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேலி.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் சிம்புதேவன், புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
இம்சை அரசியாக மாறப் போகும் நயன்தாரா.. வடிவேலுவின் 'எலி’ பட இயக்குநர் படத்தில் நடிக்கப் போறாராம்!
2006ல் வெளியீடு
வடிவேலுவின் காமெடி இம்சையில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட ந்த படம் வடிவேலுவின் கேரியரில் மிகவும் சிறப்பான படமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடியை இழைக்க விட்டிருந்தார் இயக்குநர் சிம்புதேவன்.
எவர்கிரீன் காமெடி
ஒரு மன்னனின் அறியாமை அவரை மட்டுமின்றி எவ்வாறு குடிமக்களையும் பாதிக்கும் என்பதை நகைச்சுவையுடன் தெரிய படுத்தியிருந்தார் சிம்புதேவன். இயக்குர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான இந்த படம் எப்போதும் எவர்கிரீன் காமெடி படமாக இருந்தது. மன்னர் காலத்து கதையானாலும் அதையும் தற்போதைய ரசிகர்களின் மன ஓட்டத்திற்கு தக்க இயக்கியிருந்தார்.
சிம்புதேவன் நன்றி
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளை நேற்றுடன் கடந்துள்ளது. இதையொட்டி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார். படம் குறித்து தோள் தொட்டு பாராட்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
புலி படம் இயக்கும் வாய்ப்பு
மேலும் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என்றென்றும் தனது நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் சிம்புதேவனின் திரைக்கதை உள்ளிட்ட விஷயங்கள் பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில் சிம்புதேவனுக்கு அடுத்ததாக விஜய்யின் புலி படத்தை இயக்கும் வாய்ப்பை இந்த படம் பெற்றுத் தந்தது.