Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புஷ்பா 2 படத்தில் இணையும் சாய் பல்லவி? வெயிட்டான கேரக்டராம்.. விரைவில் அறிவிப்பு!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. வசூலிலும் மிரட்டியது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் தற்போது பிசியாக காணப்படுகிறார்.
சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்... நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். சிகப்பு சந்தன மரங்களின் கடத்திலில் ஈடுபடும் கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.
வரவேற்பை பெற்ற பாடல்கள்
இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டு, கரடுமுரடான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் மிகுந்த பலத்தை சேர்த்தது. மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.
வலிமையான 2வது பாகம்
இதில் ஸ்ரீவள்ளி மற்றும் சாமி பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. இதில் சாமி பாடலில் ராஷ்மிகாவின் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதான இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை மேலும் வலுவாக கொடுக்க சுகுமார் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வெயிட்டான கேரக்டரில் சாய் பல்லவி?
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து இந்தப் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகையும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது வேறு யாருமில்லை. நடிகை சாய் பல்லவிதான்.
பழங்குடியின பெண்ணாக சாய் பல்லவி?
இந்தப் படத்தில் பழங்குடி பெண் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், மிகவும் வெயிட்டான அந்தக் கேரக்டரில்தான் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் விஜய் சேதுபதியும் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில் இவை குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.