Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புஷ்பா 2 படத்தில் இணையும் சாய் பல்லவி? வெயிட்டான கேரக்டராம்.. விரைவில் அறிவிப்பு!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. வசூலிலும் மிரட்டியது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் தற்போது பிசியாக காணப்படுகிறார்.
சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்... நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். சிகப்பு சந்தன மரங்களின் கடத்திலில் ஈடுபடும் கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.
வரவேற்பை பெற்ற பாடல்கள்
இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டு, கரடுமுரடான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் மிகுந்த பலத்தை சேர்த்தது. மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.
வலிமையான 2வது பாகம்
இதில் ஸ்ரீவள்ளி மற்றும் சாமி பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. இதில் சாமி பாடலில் ராஷ்மிகாவின் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதான இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை மேலும் வலுவாக கொடுக்க சுகுமார் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வெயிட்டான கேரக்டரில் சாய் பல்லவி?
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து இந்தப் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகையும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது வேறு யாருமில்லை. நடிகை சாய் பல்லவிதான்.
பழங்குடியின பெண்ணாக சாய் பல்லவி?
இந்தப் படத்தில் பழங்குடி பெண் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், மிகவும் வெயிட்டான அந்தக் கேரக்டரில்தான் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் விஜய் சேதுபதியும் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில் இவை குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.