Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் சங்கம் தேர்தல்.. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது... விஷால் பரபர!
சென்னை: நீதியின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. குளறுபடிகள் காரணமாக 23ஆம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பின் பாண்டவர் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே என தெரிவித்தது.
நம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபர டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எப்போதும்போல நீதித்துறையும் சட்டமும் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் என பதிவிட்டுள்ளார் விஷால்.